Pages

Wednesday 15 February 2012



தமிழ்நூல் விவர அட்டவணை - சாதிநூற்பட்டியல்


இதில் சாதிநூல் என்கிற பொருண்மையில் ஒரு குறிப்பிட்ட சாதி தொடர்பான நூல்கள், சாதிபற்றிய பொதுவான நூல்கள், குறிப்பிட்ட சாதி சார்ந்த சடங்குகள், மாநாடுகள், தீர்மானங்கள், தீர்ப்புகள், நடவடிக்கைகள், வரலாறுகள், ஆய்வுகள், கண்டனங்கள், அறிக்கைகள் என ஒட்டுமொத்தமாக புரிந்துகொள்ளும் வகையில் கீழ்காணும் நூல்கள் தெரிந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மையான நூல்கள் 1961 முதல் 1978 வரையுள்ள காலங்களில் தமிழநாடு அரசினர் தமிழ் வளர்ச்சித்துறைகள் சார்சிபில் வெளியிடப்பட்ட தமிழ் நூல் விவர அட்டவணைத் (ஜிலீமீ னீணீபீக்ஷீணீs stணீtமீ ஜிணீனீவீறீ ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் - 1867-1935) தொகுதிகளிலிருந்தே எடுக்கப்பட்டவை. பின்வரும் ஆய்வாளர்களுக்குப் பயன்அளிக்கும் வகையில் இவை காலவரிசைப்படி தொகுத்துத் தரப்பட்டள்ளன. சாதி - சாதியம் தொர்பான அத்துணை செல்பாடுகளையும் ஒருங்கே ஆய்வதின் மூலமே சாதியும் அதன் வீரியமும் தமிழ் அச்சுப்பண்பாட்டில் நிகழ்த்தியிருக்கிற தாக்கத்தை நாம் மதிப்பிடமுடியும் என்ற வகையில் அச்சில் வெளிவந்த சாதிசம்பந்தமான நூலகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  1. 1869 - செங்குந்தர் பிள்ளைத்தமிழ், கோவிந்த பிள்ளை இயற்றியது, வர்த்தமான தரங்கிணீ சாகை அச்சுக்கூடம்   
  2. 1870 -    ஆரிய புராண வசனம்: நயினாத்தை முதலியார் இயற்றியது, கலாரத்நாகரம்அச்சுக்கூடம், சென்னை, (மொ-ப) 53.

1871 - சாதி (எண் - 12)(நீணீst ழிஷீ.12): இரண்டாம் பதிப்பு,கிரேவஸ் குக்சன் அண்டு கோ, ஸ்காட்டிஸ் அச்சுக்கூடம்,   சென்னை, (மொ-ப)40, விலை-3  பைசா.
1872-    ஜாதி சங்கிரக சாரம்: குண்ணம் முனிசாமி பிள்ளை இயற்றியது,       கவிரஞ்சனி அச்சுக்கூடம், சென்னை.
1874- வேளாளர் இயல்பு :கெ.வ நாகலிங்க சாஸ்திரி இயற்றி,                                                                                                                                                                                                                                                                                         திருஞான    சம்பந்த கவிராயர் பதிப்பித்தது, முத்தமிழாகர அச்சுக்கூடம், திருநெல்வேலி.

1874 - வைசி புராணம்: சூடாமணிப் புலவர் பாடியதை, ம. கோவிந்த செட்டியார் பதிப்பித்தது, வைசியக் கல்வி விளக்க    சங்கத்தினரின் முயற்சியால் சென்னை கம்மெர்சியல் பிரஸில் அச்சிடப்பெற்றது. (மொ-ப) 1067, விலை - 2ரூ 8 அணா.

1874 - வாணிபர் கைவளம்: ம. கோவிந்த செட்டியார், கம்மர்ஷியல் பிரஸ், சென்னை.
1874 - வாணியராயிரவர்பேரில் பாடிய அம்மானை: மா. கோவிந்த செட்டியார், கம்மர்சியல் பிரஸ், சென்னை.
1874 - சான்றோர் குல மரபு காத்தல் :ச. வின்பிரிட்டு அய்யர் இயற்றியது,
பாஸ்ட்டர் அண்டு கோ அச்சுக்கூடம், சென்னைப்பட்டணம்,       (மொ-ப) 458.
1874 - வைசிய கல்வி விளக்க சங்க விஜயம் :மா. கோவிந்த செட்டியார், மாதவ நிவாச அச்சுக்கூடம், (மொ-ப) 66.
1874 - வைசிய புராணம்: சி. ராஜகோபால் பிள்ளை, முதற்பதிப்பு; சீ.ஜீ. ரத்தின முதலியார் & கோ; கம்மர்சியல் பிரஸ்,விலை-2ரூ,8 அணா.
1875 - பருவதராஜ புராணச் சுருக்கம்: மூலமும் உரையும்: முதல் பதிப்பு;
                  புதுவை, பு.சி. சின்னதம்பி நாட்டார் இயற்றியது, அருணாசல முதலியார் பதிப்பித்தது, மனோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை.

No comments:

Post a Comment