Pages

Wednesday 15 February 2012

சாதிநூல்-7


7. 1883 - பாண்டியகுல விளக்கம்:
இந்நூலை இயற்றியவர் அ.க. பொன்னுசாமி நாடார் - இதை ஆ.பி. பாலசுப்பிரமணிய நாட்டார் பார்வையிட்டு - கோ. ரத்தினவேல் நாடன் உத்திரவின்படி-சூ.வெங்கடாஜலமுதலியாரின் குமாரர் சூ. முனிசாமி முதலியாரது மாதவநிவாசவச்சுக்கூடத்திற் 1883இல் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டுரிஜிஸ்டர் செய்யப்பட்டது-இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1899ஆம் வருடம் மேற்படியாராலேயே வெளிவந்தது-விலை புஸ்தகம் ஒன்றுக்கு 4 அணாக்கள்-சில நாடார் தலைவான்கள் தங்கள் குலவிபரத்தை அறியவும் அதே சமயம் ஆங்கிலேய துரைத்தனத்தார்கள் தமிழ்நாட்டு மன்னர் மரபினர் இன்னார் என்று அறியவும் இந்நூல் செய்யப்பட்டதாக அதன் பாயிரம் கூறுகின்றது. இது பாண்டிய மன்னர்களின் வம்சாவழியைக் கூறி அந்த  வழியே வந்தவர்களாக நாடார்சாதி மக்களைக் குறிப்பிடுகிறது-பாண்டியகுல க்ஷத்திரியர்களான நாடார்களின் நிலை வடுக அரசர்களான நாயக்கமன்னர்கள் மற்றும் கிருஷ்ணதேவராயர் முதலியோரால் தாழ்நிலைக்குத்தள்ளப்பட்டது என்றும் அவர்களின் இன்றைய தாழ்ச்சிக்கு அவர்களே காரணம் என்று விளக்குகிறது-நாடார் என்பது தமிழ் அரசரான பாண்டியர்களுக்குச் சிறப்புப்பட்டமாக விளங்குவதைக்குறித்து நாடார்கள் பாண்டிய வம்சத்தினர் என சான்றளிக்கிறது-ஒவ்வொரு சமூகத்தினரும் தன்னை ஏதோ ஒரு மன்னர் வழியினர் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகின்றதைப் பார்க்கிறோம்-மேலும் பாண்டியரான நாடார்களின் இத்தகைய நிலை ஆங்கிலேய துரைத்தனர்தாரின் வருகையால் களைந்ததாகவும் கல்வியறிவு இவர்களாளேயே தமக்கு அளிக்கப்பட்டதாகவும் பிரித்தானிய அரசினைப்புகழ்ந்து பாடுகிறது இந்நூல். 

No comments:

Post a Comment